மல்யுத்த சம்மேளன தலைவர் பதவி விலக கோரி கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிட்ஜ் பூசன் சரன் சிங் மீது குற்றம்சாட்டி வீராங்கனைகள் 17 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பாலியல் குற்றசாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூசன் சரன் சிங் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அதற்கு நீதிகேட்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கடந்த 17 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டத்தை நசுக்க மத்திய அரசு காவல்துறை மூலம் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.



இந்நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிட்ஜி பூசன் சரண் சிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி கவுன்சில் சார்பில் மத்திய தந்தி அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட கவுன்சில் பொதுச் செயலாளர் தங்கவேல், கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்க செயலாளர் சிவசாமி, தமிழ்நாடு எ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ், கோவை மாவட்ட பொறியியல் பொது தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி சந்திரன், பிரபா ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...