காந்திபுரம் அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்டவர் திருநங்கை..! - மருத்துவ பரிசோதனையில் தகவல்!

கோவை காந்திபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் இறந்தவர் திருநங்கை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இறந்த திருநங்கை யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: காந்திபுரம் பகுதியில் எரிந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் திருநங்கை என்பது, மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் எரிந்த நிலையில் சுமார் 39 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருப்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த நபரை உடலை மீட்டனர்.



இதனையடுத்து, இறந்தவர் யார் என்பது குறித்தும் கொலையா? என்ற கோணத்தில் விசாரணை துவங்கினர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனையில் இறந்தவர் திருநங்கை என்பது தெரியவந்துள்ளது.



இருப்பினும் அவர் யார்? எதற்கு வந்தார் என்பதும்,திருநங்கை சடலமாக மீட்கப்பட்ட இடம் இறுதியாக யார் பயன்பாட்டில் இருந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் சாலையோரங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...