காந்திபுரம் அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்டவர் திருநங்கை..! - மருத்துவ பரிசோதனையில் தகவல்!

கோவை காந்திபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் இறந்தவர் திருநங்கை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இறந்த திருநங்கை யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: காந்திபுரம் பகுதியில் எரிந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் திருநங்கை என்பது, மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் எரிந்த நிலையில் சுமார் 39 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருப்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த நபரை உடலை மீட்டனர்.



இதனையடுத்து, இறந்தவர் யார் என்பது குறித்தும் கொலையா? என்ற கோணத்தில் விசாரணை துவங்கினர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனையில் இறந்தவர் திருநங்கை என்பது தெரியவந்துள்ளது.



இருப்பினும் அவர் யார்? எதற்கு வந்தார் என்பதும்,திருநங்கை சடலமாக மீட்கப்பட்ட இடம் இறுதியாக யார் பயன்பாட்டில் இருந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் சாலையோரங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...