கூடலூர் நகராட்சி சார்பில்  திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் - திமுகவினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

கோவை  வடக்கு மாவட்ட கூடலூர் நகர திமுக சார்பாக திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றுவருவதாக கூட்டத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.



கோவை: கோவை சாமிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கூடலூர் நகராட்சி தலைவர் மற்றும் நகரசெயலாளர் அறிவரசு தலைமை வகித்தார்.

அப்போது வரிவசூல் செய்வதில் சுமார் 70 நாட்களில் கூடலூர் நகராட்சி தமிழகத்தில் 2வது இடத்தை பெற்றுள்ளதாகக் கூறினார்.



பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நல திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும்,கல்லூரி மாணவ மாணவியர், மகளிர் மற்றும் முதியோர் ஆகியோருக்கு தனித்தனி திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்று வருகிறது. எனவே வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.



அதைத் தொடர்ந்து, கோவை வடக்கு மாவட்டசெயலாளர் தொண்டாமுத்தூர்அ.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ.தர்மலிங்கம், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் பா.அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



இந்தப் பொதுக்கூட்டத்தில் கூடலூர் நகர் மன்ற உறுப்பினர்கள், திமுக கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...