கூடலூர் நகராட்சி சார்பில்  திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் - திமுகவினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

கோவை  வடக்கு மாவட்ட கூடலூர் நகர திமுக சார்பாக திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றுவருவதாக கூட்டத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.



கோவை: கோவை சாமிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கூடலூர் நகராட்சி தலைவர் மற்றும் நகரசெயலாளர் அறிவரசு தலைமை வகித்தார்.

அப்போது வரிவசூல் செய்வதில் சுமார் 70 நாட்களில் கூடலூர் நகராட்சி தமிழகத்தில் 2வது இடத்தை பெற்றுள்ளதாகக் கூறினார்.



பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நல திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும்,கல்லூரி மாணவ மாணவியர், மகளிர் மற்றும் முதியோர் ஆகியோருக்கு தனித்தனி திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்று வருகிறது. எனவே வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.



அதைத் தொடர்ந்து, கோவை வடக்கு மாவட்டசெயலாளர் தொண்டாமுத்தூர்அ.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ.தர்மலிங்கம், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் பா.அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



இந்தப் பொதுக்கூட்டத்தில் கூடலூர் நகர் மன்ற உறுப்பினர்கள், திமுக கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...