ஊராட்சித் தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் - சூலூர் அருகே பரபரப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அருகே ஊராட்சி பெண் தலைவரை கண்டித்து திமுக கவும்சிலர்கள் மூவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, பெண் ஊராட்சி தலைவருக்கு ஆதரவாக பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஒன்றுகூடி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.


கோவை: சூலூர் அருகே பெண் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் மூவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செலக்கரிச்சல் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் சுமார் 6,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மரகதவடிவு என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.

இதில் 4 அதிமுக கவுன்சிலர்கள் சுயேட்சையாக வெற்றி பெற்று திமுகவுக்கு ஆதரவளித்து வரும் 5 கவுன்சிலர்களும் உள்ளனர். இந்நிலையில் அதிமுக மெஜாரிட்டியாக உள்ளதால் அதிமுக பெண் தலைவராக மரகத வடிவு இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக ஊராட்சி கூட்டங்களுக்கு இந்த ஐந்து பேரும் வராமல் இருந்துள்ளனர். ஊராட்சி செயல்பாடுகளில் முறையாக நடைபெறவில்லை எனத் தொடர்ந்து கூட்டங்களை புறக்கணித்து வந்துள்ளனர்.



மேலும் தலைவர், கவுன்சிலர்களை மதிக்கவில்லை எனவும் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதனையடுத்து, பெண் ஊராட்சி மன்ற தலைவர் மரகத வடிவுக்கு ஆதரவாக உள்ளூர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட பஞ்சாயத்து கூடுதல் இயக்குனர் கவுன்சிலர்கள் இடையே தலைவருடன் ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுவந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல்துறையினர், அவர்களிடம் சமரசம் பேசி போராட்டத்தை தற்காலிகமாக கைவிட செய்தனர்.

இந்நிலையில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் மற்றும் மற்ற கவுன்சிலர்கள் தலைவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...