12ம் வகுப்பு தேர்வு முடிவு - மாநில அளவில் 2ம் இடம் பிடித்த திருப்பூர் மாவட்டம்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட  நான் முதல்வன், மாணவர்களின் கையேடு ஆகிய திட்டங்களால் திருப்பூர் மாவட்டம் இன்று மாநில அளவில் இரண்டாம் இடமும், அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்:தமிழக முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடந்தது.

இதில் திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 747 மாணவர்கள், 13 ஆயிரத்து 868 மாணவியர் உள்பட 24 ஆயிரத்து 732 பேர் தேர்வை எழுதினர். இதைத்தொடர்ந்து, தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியானது ஏப்ரல் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ம் தேதி வரையில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 24,185 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 97.79 சதவிதம் பெற்று தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில் அரசு பள்ளிகள் அளவில் திருப்பூர் மாவட்ட 96.45 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவில், திருப்பூர் மாவட்டம் ஏழாம் இடம் பிடித்திருந்தது. இந்த ஆண்டில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருப்பது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளிகள் மட்டத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருப்பது கல்வியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பள்ளி கல்வித்துறைக்கு கவனம் ஒதுக்கி பள்ளிகளில் ஆய்வு செய்து எங்களுக்கு ஊக்கம் அளித்த காரணத்தால் அரசுப் பள்ளியில் 96.45 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்று மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது. மேலும் 97.79சதவீதம் பெற்று மாவட்டம் அளவில் 2ம் இடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக நான் முதல்வன், மாணவர்களுக்கான கையேடு என பல்வேறு திட்டங்களை தீட்டி இருப்பதால், அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகமாக படித்து வருகின்றனர்.

மேலும் திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாநில அளவில் முதலிடத்தை பிடிப்போம். திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ள 19 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...