12ம் வகுப்பு தேர்வு முடிவு - மாநில அளவில் 2ம் இடம் பிடித்த திருப்பூர் மாவட்டம்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட  நான் முதல்வன், மாணவர்களின் கையேடு ஆகிய திட்டங்களால் திருப்பூர் மாவட்டம் இன்று மாநில அளவில் இரண்டாம் இடமும், அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்:தமிழக முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடந்தது.

இதில் திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 747 மாணவர்கள், 13 ஆயிரத்து 868 மாணவியர் உள்பட 24 ஆயிரத்து 732 பேர் தேர்வை எழுதினர். இதைத்தொடர்ந்து, தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியானது ஏப்ரல் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ம் தேதி வரையில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 24,185 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 97.79 சதவிதம் பெற்று தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில் அரசு பள்ளிகள் அளவில் திருப்பூர் மாவட்ட 96.45 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவில், திருப்பூர் மாவட்டம் ஏழாம் இடம் பிடித்திருந்தது. இந்த ஆண்டில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருப்பது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளிகள் மட்டத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருப்பது கல்வியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பள்ளி கல்வித்துறைக்கு கவனம் ஒதுக்கி பள்ளிகளில் ஆய்வு செய்து எங்களுக்கு ஊக்கம் அளித்த காரணத்தால் அரசுப் பள்ளியில் 96.45 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்று மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது. மேலும் 97.79சதவீதம் பெற்று மாவட்டம் அளவில் 2ம் இடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக நான் முதல்வன், மாணவர்களுக்கான கையேடு என பல்வேறு திட்டங்களை தீட்டி இருப்பதால், அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகமாக படித்து வருகின்றனர்.

மேலும் திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாநில அளவில் முதலிடத்தை பிடிப்போம். திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ள 19 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...