கனிமவளக் கொள்ளையை தடுத்திடுக..! ஜல்லி,மணலுடன் மனு அளித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்

கோவையில் கனிம வளக்கொள்ளையை தடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஜல்லி, மணல் ஆகியவற்றுடன் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு அதிகப்படியான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், கோவை மாவட்டத்தில் பல்வேறு கல்குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும் கூறி பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பிலும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.



இந்நிலையில், கனிம வளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையிலான நிர்வாகிகள், கோவைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.



அப்போது, அவர்கள் ஜல்லி மணல் உள்ளிட்ட கனிமங்களையும் எடுத்து வந்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

மேலும் கனிம வளங்கள் வெட்டி எடுத்து செல்லப்படுவது தொடர்ந்தால், கோவை மக்கள்தான் வருங்காலங்களில் பாதிக்கப்படுவார்கள் எனவும், கனிம வள கொள்ளையால் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு செல்லும் பணம், அரசுக்குக் கிடைத்தால் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வந்துவிடலாம் எனவும், மதுவில் வரும் வருமானத்தைவிட அதிக அளவு வருமானம் கனிம வளத்தில் கிடைக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...