அன்னூர் அருகே காப்பர் கம்பிகள் திருடிய தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் கைது!

கோவை அன்னூர் அருகே இரும்பு, காப்பர் கம்பிகள் விற்பனை செய்யும் நிறுவனத்திற்குள் புகுந்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடிச்சென்ற தூத்துக்குடியை சேர்ந்த பூவலிங்கம் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் அன்னூர் மாணிக்கம்பாளையம் பகுதியில் அல்லாய்ஸ் என்ற இரும்பு, காப்பர் போன்ற கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதனிடையே வெங்கடேஸ்வரன் கடந்த மே 5 ஆம் தேதி வியாபாரம் முடிந்து தனது நிறுவனத்தைபூட்டிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மறுநாள் காலை வந்து பார்த்தபோது நிறுவனத்திற்குள் வைத்திருந்த 674 காப்பர் இரும்பு பாகங்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இப்புகாரில் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை பிடிக்க கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூவலிங்கம் (32) என்பவர் இக்குற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பூவலிங்கத்தை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து சுமா‌ர் 5 லட்சம் மதிப்புள்ள 674 காப்பர் இரும்பு பாகங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...