அன்னூர் அருகே காப்பர் கம்பிகள் திருடிய தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் கைது!

கோவை அன்னூர் அருகே இரும்பு, காப்பர் கம்பிகள் விற்பனை செய்யும் நிறுவனத்திற்குள் புகுந்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடிச்சென்ற தூத்துக்குடியை சேர்ந்த பூவலிங்கம் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் அன்னூர் மாணிக்கம்பாளையம் பகுதியில் அல்லாய்ஸ் என்ற இரும்பு, காப்பர் போன்ற கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதனிடையே வெங்கடேஸ்வரன் கடந்த மே 5 ஆம் தேதி வியாபாரம் முடிந்து தனது நிறுவனத்தைபூட்டிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மறுநாள் காலை வந்து பார்த்தபோது நிறுவனத்திற்குள் வைத்திருந்த 674 காப்பர் இரும்பு பாகங்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இப்புகாரில் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை பிடிக்க கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூவலிங்கம் (32) என்பவர் இக்குற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பூவலிங்கத்தை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து சுமா‌ர் 5 லட்சம் மதிப்புள்ள 674 காப்பர் இரும்பு பாகங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...