கோவையில் ஓடும் பேருந்தில் இளைஞரை சரமாரியாக வெட்டிய 4 பேர் கொண்ட கும்பல் - ஒருவர் கைது!

கோவை அரசு மருத்துவமனை அருகே முன்விரோதம் காரணமாக கமலேஷ் என்ற இளைஞரை ஓடும் பேருந்தில், 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிய நிலையில், அந்த கும்பலில் சந்தோஷ் என்ற நபரை பொதுமக்கள் பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஓடும் பேருந்தில் இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் ஓடும் பஸ்சில் வாலிபரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. பஸ்சில் இருந்த பயணிகள் ஒருவரை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் கமலேஷ் (19). கடந்த சில நாட்களுக்கு முன்பு புலியகுளத்தில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த தகராறில், சந்தோஷ் என்பவரை கமலேஷ் கத்தியால் தாக்கியதாக தெரிகிறது. இதில் சந்தோஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டது.

ராமநாதபுரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில், தன்னை கத்தியால் குத்தியதால் கமலேசை பழிவாங்க சந்தோஷ் திட்டமிட்டார். இதனிடையே நேற்றிரவு 8 மணியளவில் சிங்காநல்லூரில் இருந்து தீத்திப்பாளையம் நோக்கி சென்ற எஸ்.3 அரசு பேருந்தில் கமலேஷ் பயணம் செய்தார்.

கமலேஷ் பேருந்தில் ஏறுவதை பார்த்த சந்தோஷ் உள்பட 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் அந்த பேருந்தை பின்தொடர்ந்தனர். கோவை அரசு மருத்துவமனை நிறுத்தத்தில் பேருந்து நின்றதும், மோட்டார் சைக்கிள்களை பேருந்தின் முன் நிறுத்திவிட்டு பேருந்திற்குள் ஏறிய 4 பேரும், கமலேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது.

இதில் அவருக்கு தலையில் வெட்டு விழுந்தது. தப்பி ஓட முயன்றார். இந்த சம்பவத்தை பார்த்ததும் சில பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சில பயணிகள் துணிச்சலுடன் அரிவாளால் வெட்டிய கும்பலை மடக்கிப்பிடிக்க முயன்றனர்.



அதில், 3 பேர் தப்பி ஓடிய நிலையில், சந்தோஷ் குமார் என்பவர் மட்டும் பயணிகளிடம் பிடிபட்டார். அவரை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காயமடைந்த கமலேஷ் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பயங்கர சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...