கோவையில் ஓடும் பேருந்தில் இளைஞரை சரமாரியாக வெட்டிய 4 பேர் கொண்ட கும்பல் - ஒருவர் கைது!

கோவை அரசு மருத்துவமனை அருகே முன்விரோதம் காரணமாக கமலேஷ் என்ற இளைஞரை ஓடும் பேருந்தில், 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிய நிலையில், அந்த கும்பலில் சந்தோஷ் என்ற நபரை பொதுமக்கள் பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஓடும் பேருந்தில் இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் ஓடும் பஸ்சில் வாலிபரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. பஸ்சில் இருந்த பயணிகள் ஒருவரை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் கமலேஷ் (19). கடந்த சில நாட்களுக்கு முன்பு புலியகுளத்தில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த தகராறில், சந்தோஷ் என்பவரை கமலேஷ் கத்தியால் தாக்கியதாக தெரிகிறது. இதில் சந்தோஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டது.

ராமநாதபுரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில், தன்னை கத்தியால் குத்தியதால் கமலேசை பழிவாங்க சந்தோஷ் திட்டமிட்டார். இதனிடையே நேற்றிரவு 8 மணியளவில் சிங்காநல்லூரில் இருந்து தீத்திப்பாளையம் நோக்கி சென்ற எஸ்.3 அரசு பேருந்தில் கமலேஷ் பயணம் செய்தார்.

கமலேஷ் பேருந்தில் ஏறுவதை பார்த்த சந்தோஷ் உள்பட 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் அந்த பேருந்தை பின்தொடர்ந்தனர். கோவை அரசு மருத்துவமனை நிறுத்தத்தில் பேருந்து நின்றதும், மோட்டார் சைக்கிள்களை பேருந்தின் முன் நிறுத்திவிட்டு பேருந்திற்குள் ஏறிய 4 பேரும், கமலேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது.

இதில் அவருக்கு தலையில் வெட்டு விழுந்தது. தப்பி ஓட முயன்றார். இந்த சம்பவத்தை பார்த்ததும் சில பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சில பயணிகள் துணிச்சலுடன் அரிவாளால் வெட்டிய கும்பலை மடக்கிப்பிடிக்க முயன்றனர்.



அதில், 3 பேர் தப்பி ஓடிய நிலையில், சந்தோஷ் குமார் என்பவர் மட்டும் பயணிகளிடம் பிடிபட்டார். அவரை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காயமடைந்த கமலேஷ் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பயங்கர சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...