திருப்பூர் வடமாநில நபர் சந்தேகத்தின் பேரில் கைது - பின்னால் சென்ற மனநலம் பாதித்த சிறுவனை காணவில்லை என புகார்!

திருப்பூரில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பூஷன் என்பவரை போலீசார், கஞ்சா விற்பனை செய்வதாக சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற வாகனத்தின் பின்னால் அழுதுகொண்டே சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: வடமாநில நபர் கஞ்சா விற்பதாக காவல் நிலையம் அழைத்துச் சென்ற நிலையில், அவருடன் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த பூஷன் என்பவர் தனது மனைவி ராணி தேவி ஆகியோர் திருப்பூர், சந்தைப்பேட்டை பகுதியில் இரண்டு ஆண் குழந்தைகளோடு டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் பூசன் கஞ்சா விற்பனை செய்வதாக சந்தேகத்தின் பேரில் அவரை விசாரணைக்கு போலீஸ் வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவரது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ஐந்து வயது மகனான கெளரப்குமார் என்ற சிறுவன் தந்தை சென்ற காவல்துறை வாகனத்திற்கு பின்னே அழுதவாறுச் சென்றுள்ளார்.

விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்த பூஷனிடம் மகனை காணவில்லை என மனைவி தெரிவித்த நிலையில் அதிர்ச்சி அடைந்த பூஷன் மற்றும் அவரது மனைவி அருகில் இருந்த கடையின் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர்.



அப்போது மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஐந்து வயது சிறுவன், காவல்துறை வாகனத்திற்கு பின்னால் சென்றதும், பின்பு காணாமல் போனதும் தெரிய வந்தது. இது குறித்து வட மாநில தம்பதியினர் சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பிற்கு புகார் அளித்து காணாமல் போன சிறுவனை தேடி வருகின்றனர்.

இதனிடையே பூஷன் மீது மூன்று வருடத்திற்கு முன்பாக திருப்பூரில் சட்டவிராத புகையிலை பொருட்கள் விற்றதாக வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...