கோவையில் வாய்த்தகராறில் சிறுவன் மீது தாக்குதல் - மற்றொரு சிறுவன் கைது

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக பள்ளி சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு சிறுவனை மற்றொரு சிறுவன் ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தன்னுடன் படித்த சிறுமியை காதலித்து வந்தார்.

இதனால், சிறுவனுக்கும், சிறுமியின் அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சிறுமியின் அண்ணன் அச்சிறுவனை தாக்கியுள்ளார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள மகாளியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்ததுள்ளது.

அங்கு சிறுவன் மற்றும் அவரது நண்பர் ஜெகதீஷ் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சிறுமியின் அண்ணன் மீண்டும் அச்சிறுவனை அழைத்து தகராறு செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அதை தடுக்க சென்ற நண்பர் ஜெகதீஷை, சிறுமியின் அண்ணன் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்நிலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...