கோவை குனியமுத்தூரில் தீயணைப்பான் வெடித்து கல்லூரி மாணவனுக்கு கால் முறிவு!

கோவை குனியமுத்தூரில் பழைய இரும்பு கடையிலிருந்த தீயணைப்பான் வெடித்ததில் சாலையில் சென்ற அருண்குமார் என்ற கல்லூரி மாணவனின் கால் முறிந்தது. விபத்து தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: குனியமுத்தூரில் தீயணைப்பான் வெடித்ததில் கல்லூரி மாணவன் கால் முறிந்தது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அருண்குமார் தனது பைக்கில் நண்பர் ஹரிபிரசாத் என்பவருடன் பாலக்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, குனியமுத்தூர் நரசிம்மபுரம் அருகே வந்தபோது அப்பகுதியில் சாலை ஓரத்திலிருந்த பழைய இரும்பு பொருட்கள் கடையிலிருந்து, பயங்கர சத்தத்துடன் தீயணைப்பான் வெடித்து சிதறி சாலையில் பைக்கில் சென்ற அருண்குமார் காலில் அடித்துள்ளது.



இதில் இடது காலில் அருண்குமாருக்கு முறிவு ஏற்பட்டது. மேலும் தவறி விழுந்ததில் ஹரிபிரசாத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. விசாரணையில் குமார் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடைக்கு வந்த நபர் ஒருவர் 3 பழைய தீயணைப்பானை கொடுத்ததாகவும், அதனை சோதனை செய்தபோது ஒரு தீயணைப்பான் வெடித்து சிதறி அருண்குமார் மீது பட்டதும் தெரியவந்தது.



விபத்து தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...