கோவை குனியமுத்தூரில் தீயணைப்பான் வெடித்து கல்லூரி மாணவனுக்கு கால் முறிவு!

கோவை குனியமுத்தூரில் பழைய இரும்பு கடையிலிருந்த தீயணைப்பான் வெடித்ததில் சாலையில் சென்ற அருண்குமார் என்ற கல்லூரி மாணவனின் கால் முறிந்தது. விபத்து தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: குனியமுத்தூரில் தீயணைப்பான் வெடித்ததில் கல்லூரி மாணவன் கால் முறிந்தது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அருண்குமார் தனது பைக்கில் நண்பர் ஹரிபிரசாத் என்பவருடன் பாலக்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, குனியமுத்தூர் நரசிம்மபுரம் அருகே வந்தபோது அப்பகுதியில் சாலை ஓரத்திலிருந்த பழைய இரும்பு பொருட்கள் கடையிலிருந்து, பயங்கர சத்தத்துடன் தீயணைப்பான் வெடித்து சிதறி சாலையில் பைக்கில் சென்ற அருண்குமார் காலில் அடித்துள்ளது.



இதில் இடது காலில் அருண்குமாருக்கு முறிவு ஏற்பட்டது. மேலும் தவறி விழுந்ததில் ஹரிபிரசாத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. விசாரணையில் குமார் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடைக்கு வந்த நபர் ஒருவர் 3 பழைய தீயணைப்பானை கொடுத்ததாகவும், அதனை சோதனை செய்தபோது ஒரு தீயணைப்பான் வெடித்து சிதறி அருண்குமார் மீது பட்டதும் தெரியவந்தது.



விபத்து தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...