வால்பாறையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு!

கோவை மாவட்டம், வால்பாறை இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் பகுதியில் கரடி தாக்கி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தார்.



கோவை: வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பாற்றுவதற்கு உட்பட்ட டாப்சிலிப் வால்பாறை, மானாம்பள்ளி போன்ற வனப்பகுதிகளில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.



கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பாற்றுவதற்கு உட்பட்ட டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி போன்ற வனப்பகுதிகளில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேற்று முதல் ஆய்வு செய்தார்.



இன்று வால்பாறைக்கு வருகை தந்த வனத்துறை அமைச்சர் சில தினங்களுக்கு முன்பு தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் சிறுத்தை தாக்கியவரையும், கரடி தாக்கியவரையும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரையும் சந்தித்து சிறுத்தை தாக்கிய வடமாநில தொழிலாளர் அணில் ஒரான் என்பவருக்கு ஐந்தாயிரம் நிவாரணம் வழங்கி அவருடைய உடல் நிலையை பற்றி மருத்துவரிடம் கேட்டறிந்தார்.



பின்பு இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் பகுதியில் கரடி தாக்கிய ஐயப்பன் என்பவரை சந்தித்து அவருக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளித்து அவருடைய உடல் நலத்தை கேட்டறிந்தார். அதன் பின்பு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கிய இடத்திற்கு சென்று அங்கு சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய வைக்கப்பட்ட தானியங்கி கேமராவை பார்வையிட்டு மனித வன விலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதை மக்களை அச்சுறுத்தாத வண்ணம் செயல்படுத்துவது என்று வனத்துறை அதிகாரியிடம் ஆலோசனை செய்தார்.

உடன் மாவட்ட வனத்துறை அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர், வன சரகர்கள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...