கோவை அருகே காட்டுயானை தாக்கி ஒருவர் பலி - வனத்துறை சார்பில் ரூ.50ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் காட்டுயானை தாக்கி தூமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜப்பன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருந்துவருகிறது.

குறிப்பாக காட்டு யானைகளின் நடமாட்டம் இங்கு அதிகமாக காணப்படுகிறது. இதனால், மாங்கரையில் இருந்து ஆனைகட்டி மலை பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், தூமனூர் பகுதியை சேர்ந்த ராஜப்பன்(வயது48) என்பவர், சேம்புக்கரை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பூதிமேடு பகுதியில் எதிரில் வந்த காட்டுயானை அவரை துரத்தியதாக தெரிகிறது. இதில், நிலைதடுமாறிய ராஜப்பனை, அந்த காட்டுயானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ராஜப்பன் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி, உயிரிழந்த ராஜப்பன் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரண தொகையாக 50000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...