கோவை மதுக்கரை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை - ஒருவர் கைது!

கோவை மதுக்கரை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தடை செய்யப்பட்டு லாட்டரிகளை விற்பனை செய்து வந்த மதுக்கரை பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (63) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 480 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட காவல்துறையினர் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுக்கரை காவல் நிலைய பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மதுக்கரையை சேர்ந்த விஸ்வநாதன் (63) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 480 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...