கோவையில் லேப்டாப் திருடன் கைது - பென்டிரைவ், ஸ்மார்ட்வாட்ச் பறிமுதல்!

கோவையில் பட்டதாரி இளைஞர் தங்கியிருந்த அறையில் லேப்டாப்-ஐ திருடிச்சென்ற நபரை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, லேப்டாப், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் பகுதியில் அறையெடுத்து இளைஞர் ஒருவர் தங்கியுள்ளார்.

அந்த அறையில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை வைத்துவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது பொருட்கள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.



இது தொடர்பாக, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், பாரதி நேசன் என்ற நபர் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்து.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லேப்டாப், பென்டிரைவ், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...