கோவையில் 1,234 சைபர் கிரைம் புகார்கள் பதிவு - மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தகவல்

கோவை மாவட்டத்தில் நடபாண்டில் மட்டும் சைபர் கிரைம் பிரிவில் 1,234 புகார்கள் வந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். காவல்நிலையங்களில் பெறப்படும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில், சைபர் கிரைம் தொடர்பாக, 1,234 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சைபர் கிரைமில் மோசடி, ஏமாற்றுதல் என புகார்கள் அதிகமாகி வரு கிறது. நடப்பாண்டில் சைபர் கிரைமில், 1,234 புகார்கள் பெறப்பட்டு விசாரிக்கப்படுகிறது. அதில், 5 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது 4.61 கோடி வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பெறப்படும் புகார் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தர குவிந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் சுமார், 1700 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக் கப்பட்டது. எஸ்.பி., அலுவலகத்தில்அளிக்கப்படும் புகார் மனுக்கள், 5 நாட்களில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறைதீர்ப்பு முகாம்களில் பெறப்படும் புகார்களுக்கு, விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அளவில் ரவுடிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 343 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 285 ரவுடிகள் எந்த குற்றமும் செய்யமாட்டோம்" என பிணை பத்திரம் எழுதி தந்துள்ளனர். 48 ரவுடிகள் சிறையில் உள்ளனர். ஜாமீனில் வந்துள்ள ரவுடிகளை கண்காணித்து வருகிறோம்.

கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதில், கோவை மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விசாகப்பட்டணம், பெங்களூரு ஆகிய இரு இடங்களில் இருந்து, அதிகளவு கஞ்சா கடத்தி வருகின்றனர்.

மாவட்ட அளவில், 145 கல்லுாரிகளில் வருகிற, 8ம் தேதி முதல், போதை பொருட்கள் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள, 11 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி முறையாக நடக்கிறது. இ - பீட் மூலமாக ரோந்து பணிகள் முறைப்படுத்தப்பட்டு, விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...