கோவையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு - விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு!

கோவை‌ மாநகராட்சி கோணவாய்க்கால்பாளையம்‌ மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் கல்பனா, பணிகளை 15 நாட்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.99 மற்றும்‌ 85க்கு உட்பட்ட கோணவாய்க்கால்பாளையம்‌ பகுதியில்‌ நெடுஞ்சாலைத்துறை மூலம்‌ நடைபெற்று வரும்‌ மழைநீர் வடிகால்‌ மற்றும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



பின்னர் மழைநீர்‌ வடிகால்‌ மற்றும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகளை 15 தினங்களுக்குள்‌ முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வரவும்,‌ சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும்‌ பொறியாளர்களுக்கு உத்தரவிட்டனர்‌.



அதனைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.79க்கு உட்பட்ட செல்வபுரம்‌ பகுதியில்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர்‌ கல்பனா‌, அப்பகுதியிலுள்ள மழைநீர்‌ வடிகாலை தூர்வாரவும்‌, புதிதாக மழைநீர்‌ வடிகால்‌ கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...