கோவையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு - விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு!

கோவை‌ மாநகராட்சி கோணவாய்க்கால்பாளையம்‌ மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் கல்பனா, பணிகளை 15 நாட்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.99 மற்றும்‌ 85க்கு உட்பட்ட கோணவாய்க்கால்பாளையம்‌ பகுதியில்‌ நெடுஞ்சாலைத்துறை மூலம்‌ நடைபெற்று வரும்‌ மழைநீர் வடிகால்‌ மற்றும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



பின்னர் மழைநீர்‌ வடிகால்‌ மற்றும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகளை 15 தினங்களுக்குள்‌ முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வரவும்,‌ சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும்‌ பொறியாளர்களுக்கு உத்தரவிட்டனர்‌.



அதனைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.79க்கு உட்பட்ட செல்வபுரம்‌ பகுதியில்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர்‌ கல்பனா‌, அப்பகுதியிலுள்ள மழைநீர்‌ வடிகாலை தூர்வாரவும்‌, புதிதாக மழைநீர்‌ வடிகால்‌ கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...