ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் குழந்தைகள் மன நலம் குறித்த சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் குழந்தைகள் மன நலம் குறித்த சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மைன்ட் மேட்டர்ஸ் நிறுவனத்தின் டாக்டர் கலா ராஜகோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ஆட்டிசம் குறைபாடு ஆண் குழந்தைகளிடமே அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 15 பேரில் ஒரு குழந்தை இந்த நோயால் தாக்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் உள்ள மாற்றங்கள் குறித்து நன்றாக அறிந்து வைத்துள்ளனர். உங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுவது என்பது குறித்து நீங்கள் கற்றுக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு குறை உள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் பொறுமையான அனுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு புதிய திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளின் மீது தனிகவனம் செலுத்த வேண்டும். அவர்களுடைய முயற்சிகளை பாராட்ட வேண்டும். நீங்கள் அவர்களை பராமரிப்பது குறித்து அவர்களுடன் உரையாட வேண்டும்" என்றார்.



அவர் மேலும் கூறுகையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆனால் அவர்களுக்கான வாய்ப்பினை அவர்களே தேர்வுசெய்ய சுட்டிக்காட்ட வேண்டும். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு நெரிகள் குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும். சமூக நியதிகள் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் ஏதேனும ஒரு வகையில் பிரச்சனைகள் இருக்கும். பெற்றோர்கள் அந்த குழந்தைகளுக்கு அறிவுரை கூறி வழக்கமான பாதையில் திரும்ப உதவ வேண்டும். பெரும்பான்மையான குழந்தைப் பருவம் பள்ளியிலோ, அல்லது வீட்டிலேயோ கழிகிறது. அதனால், வீடு, பள்ளி போன்ற இடங்களில் குழந்தைகளுக்கு அமைதியான சூழலை உருவாக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒரு தேர்ந்த நிபுணராக செயல்பட வேண்டும்' என்றார்.



தொடர்ந்து, மன நல வளர்ச்சி குறைபாடு, புத்திக் கூர்மை செயலாற்றல், மேலாண்மை, குறிப்பிட்ட வளர்ச்சிக் குறைபாடுகள், கற்றல் குறைபாடுகள், மெதுவாக கற்றுக்கொள்வோர், மேலும் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறைபாடுகளான ஆட்டிசம், ரெட்ஸ் குறைபாடு, சிடிடி, ஏஸ்பெர்ஜெர்ஸ் குறைபாடு, பிடிடி என்ஓஎஸ், ஏடிஎச்டி, டிஐசி குறைபாடு, பேச்சுக் குறைபாடு உள்ளிட்டவை குறித்து பேசினார்.



இந்நிகழ்ச்சியினை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பி.பாபாஞானகுமார் துவக்கி வைத்தார். சமூக பணி துறைத் தலைவர் முனைவர் ஏ.அழகர்சாமி, பேராசிரியர் சங்கீதாபால், பி.மோகனபிரியா, வி.வைஸ்னவி மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...