துடியலூர் சுற்றுவட்டாரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை தொடர்ந்து 2 மணி நேரம் விடாமல் பெய்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்த நிலையில், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.


கோவை: துடியலூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வரும் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கோவையில் காலை முதல் வெயில் அடித்த நிலையில் பிற்பகலுக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.



தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், இடிகரை, ஜி.என்.மில்ஸ், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.



கனமழை காரணமாக குலிர்ச்சியான சூழல் நிலவி வரும் நிலையில், மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...