கோவையில் இருந்து மும்பைக்கு நாளை முதல் கூடுதல் விமான சேவை - ஏர் இந்தியா அறிவிப்பு!

கோவையில் இருந்து மும்பைக்கு கூடுதலாக ஒரு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட உள்ளது. இந்த சேவையானது நாளை முதல் துவங்கப்பட உள்ள நிலையில், காலை 6.30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானம் காலை 8.20 மணிக்கு கோவை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து மும்பைக்கு நாளை முதல் கூடுதலாக விமானம் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை விமான நிலையத்திற்கு தினமும் 23 உள்ளூர் விமானங்களும், சிங்கப்பூர் மற்றும் சார்ஜாவிற்கு செல்லும் இரண்டு சர்வதேச விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் 8,750 பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் இருந்து மும்பைக்கும், மும்பையில் இருந்து கோவைக்கும் கூடுதலாக விமான சேவை துவங்க உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் கோவையிலிருந்து மும்பைக்கு விமான சேவை துவங்க உள்ளது.

காலை 6.30 மணிக்கு மும்பையில் இருந்து கிளம்பும் ஏர் இந்தியா விமானம் காலை 8.20 மணிக்கு கோவை வந்தடையும், மீண்டும் 9.00 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி 11 மணி அளவில் மும்பை சென்றடையும்.

ஏற்கனவே கோவை மும்பை இடையே இன்டிகோ, விஸ்டாரா என மூன்று விமானங்கள் சேவை இருந்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக விமான சேவை துவங்க உள்ளது. கோவையிலிருந்து வியாபார ரீதியாகவும், வெளிநாடு மருத்துவத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் விமான சேவை துவங்கப்பட உள்ளது.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...