தாராபுரத்தில் கோஷ்டி மோதல் - பாஜக, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது!

தாராபுரத்தில் சாலையோரத்தில் பாஜக நிர்வாகிகள் மோதிக்கொண்ட விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த கல்லூரி மாணவர் மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி கொங்கு ரமேஷ் என்பவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி மற்றும் கொங்கு ரமேஷ் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி கொங்கு ரமேஷ் இருவரும் சாலையில் கட்டி பிடித்து உருண்ட சம்பவம் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த காட்சிகள் தாராபுரம் நகரம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.



இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கல்லூரி மாணவன் ரமேஷ் ராம் மற்றும் ராஜேந்திரன் என்கின்ற ராம்ராஜ் இருவரும் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்து மக்கள் கட்சியின் சார்பில் குணசீலன் என்பவரை போலீசார் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், மரக்கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...