தாராபுரத்தில் கோஷ்டி மோதல் - பாஜக, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது!

தாராபுரத்தில் சாலையோரத்தில் பாஜக நிர்வாகிகள் மோதிக்கொண்ட விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த கல்லூரி மாணவர் மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி கொங்கு ரமேஷ் என்பவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி மற்றும் கொங்கு ரமேஷ் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி கொங்கு ரமேஷ் இருவரும் சாலையில் கட்டி பிடித்து உருண்ட சம்பவம் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த காட்சிகள் தாராபுரம் நகரம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.



இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கல்லூரி மாணவன் ரமேஷ் ராம் மற்றும் ராஜேந்திரன் என்கின்ற ராம்ராஜ் இருவரும் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்து மக்கள் கட்சியின் சார்பில் குணசீலன் என்பவரை போலீசார் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், மரக்கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...