மே தினம் - கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி

கோவையில் சிந்தாமணி முதல் காமராஜ்புரம் வரை இடதுசாரி அமைப்பைச் சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள் மே தினத்தை முன்னிட்டு பேரணியாக சென்றனர்.



கோவை: கோவையில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.

உலகம் முழுவதும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றனர். தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய தியாகிகளின் நினைவுகளை போற்றும் விதமாக இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கோவையில் சிந்தாமணி முதல் காமராஜ்புரம் வரை இடதுசாரி அமைப்பைச் சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள் பேரணி நடத்தினர்.



இதில் எட்டு மணி நேர வேலைக்காக போராடிய தொழிலாளர்கள், தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய தியாகங்கள் உள்ளிட்டவற்றை போற்றி முழங்கினர்.



தொழிலாளர்களின் உரிமை ஒருபோதும் பறிபோகக் கூடாது என்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் தொழிலாளர்களின் விரோத போக்கை கடைபிடிக்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டனர்.



தொழிலாளர்களின் நலம் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



இந்தப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று பேரணியில் ஈடுபட்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...