மே தினம் - கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி

கோவையில் சிந்தாமணி முதல் காமராஜ்புரம் வரை இடதுசாரி அமைப்பைச் சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள் மே தினத்தை முன்னிட்டு பேரணியாக சென்றனர்.



கோவை: கோவையில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.

உலகம் முழுவதும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றனர். தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய தியாகிகளின் நினைவுகளை போற்றும் விதமாக இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கோவையில் சிந்தாமணி முதல் காமராஜ்புரம் வரை இடதுசாரி அமைப்பைச் சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள் பேரணி நடத்தினர்.



இதில் எட்டு மணி நேர வேலைக்காக போராடிய தொழிலாளர்கள், தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய தியாகங்கள் உள்ளிட்டவற்றை போற்றி முழங்கினர்.



தொழிலாளர்களின் உரிமை ஒருபோதும் பறிபோகக் கூடாது என்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் தொழிலாளர்களின் விரோத போக்கை கடைபிடிக்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டனர்.



தொழிலாளர்களின் நலம் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



இந்தப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று பேரணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...