கோவை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாட்டம்!

துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், முன்னாள் எம்.எல்.ஏ, ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தனர்.


கோவை: துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.



கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ, ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து மே தினம் குறித்து பேசினர்.



தொடர்ந்து துடியலூர் பகுதி கழக செயலாளர் வனிதாமணி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.



அதேபோல துடியலூர் - அப்பநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் தொழிற்சங்க பேரவை கொடி ஏற்றப்பட்டது. இந்த விழாவிற்கு துடியலூர் பகுதி கழக அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க கிளை தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார்.



இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், அம்மாபேரவை செயலாளர் கவிச்சந்திரன் மோகன், அவைத்தலைவர் ஐ.டி.ஐ.ஜெயராஜ், 1வது வட்ட கழக அவை தலைவர் செல்வகுமார், 2, 2ஏ, 14, 15ஏ வார்டு செயலாளர்கள் ஜெயகுமார், காளிச்சாமி, பந்தல் வீடு பிரகாஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...