கோவை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாட்டம்!

துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், முன்னாள் எம்.எல்.ஏ, ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தனர்.


கோவை: துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.



கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ, ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து மே தினம் குறித்து பேசினர்.



தொடர்ந்து துடியலூர் பகுதி கழக செயலாளர் வனிதாமணி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.



அதேபோல துடியலூர் - அப்பநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் தொழிற்சங்க பேரவை கொடி ஏற்றப்பட்டது. இந்த விழாவிற்கு துடியலூர் பகுதி கழக அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க கிளை தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார்.



இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், அம்மாபேரவை செயலாளர் கவிச்சந்திரன் மோகன், அவைத்தலைவர் ஐ.டி.ஐ.ஜெயராஜ், 1வது வட்ட கழக அவை தலைவர் செல்வகுமார், 2, 2ஏ, 14, 15ஏ வார்டு செயலாளர்கள் ஜெயகுமார், காளிச்சாமி, பந்தல் வீடு பிரகாஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...