மே தினம் - உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் கிராம சபை கூட்டம்

மே தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சின்ன வீரன் பட்டி, ஆண்டிய கவுண்டனூர் , கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், பெரியகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்.


திருப்பூர்: மே தினத்தை ஒட்டி உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மே தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி, சின்ன வீரன் பட்டி, ஆண்டிய கவுண்டனூர், கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், பெரியகோட்டை ஊராட்சி உட்பட பல்வேறு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இக்கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் அனைவருக்கும் வீடு கணக்கெடுக்கும் பணி உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.



குறிப்பாக ஜல் ஜீவன் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு கிராம சபை கூட்டங்களில் நடைபெற்றது. இதில், சின்ன வீரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி அய்யாவு, பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் கருப்ம்மாள், ஆண்டிய கவுண்டனூரா ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...