கோவை மாநகராட்சி 15வது வார்டில் மே தின கொண்டாட்டம்!

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை 15வது வார்டில் காங்கிரஸ் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் பச்சைமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சேக் அப்துல் காதர் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி அமைப்பாளர் விஜயா மனோகர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மனோகர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சைக்கிள் சரி செய்யும் தொழிலாளி மருதாசலம் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மே தினம் குறித்து பச்சைமுத்து சாந்தாமணி பச்சைமுத்து, மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் சின்னுராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.



அதன்பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செந்தில்குமார், சதீஷ்குமார், ஆர்.மணி, ரகுபதி, ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...