கோவை மாநகராட்சி 15வது வார்டில் மே தின கொண்டாட்டம்!

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை 15வது வார்டில் காங்கிரஸ் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் பச்சைமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சேக் அப்துல் காதர் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி அமைப்பாளர் விஜயா மனோகர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மனோகர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சைக்கிள் சரி செய்யும் தொழிலாளி மருதாசலம் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மே தினம் குறித்து பச்சைமுத்து சாந்தாமணி பச்சைமுத்து, மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் சின்னுராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.



அதன்பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செந்தில்குமார், சதீஷ்குமார், ஆர்.மணி, ரகுபதி, ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...