கோவை மாநகராட்சி 15வது வார்டில் மே தின கொண்டாட்டம்!

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை 15வது வார்டில் காங்கிரஸ் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் பச்சைமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சேக் அப்துல் காதர் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி அமைப்பாளர் விஜயா மனோகர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மனோகர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சைக்கிள் சரி செய்யும் தொழிலாளி மருதாசலம் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மே தினம் குறித்து பச்சைமுத்து சாந்தாமணி பச்சைமுத்து, மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் சின்னுராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.



அதன்பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செந்தில்குமார், சதீஷ்குமார், ஆர்.மணி, ரகுபதி, ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...