மே தினத்தையொட்டி கோவையில் கிராம சபை கூட்டம் - ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பங்கேற்பு!

மே மாதம் 1ஆம் தேதியான இன்று தொழிலாளர் தினத்தையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


கோவை: மே தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.



மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த இடிகரை போளுவாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சியின் தலைவர் அம்பி என்கிற சதானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம வளர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் நடைபெற்று முடிந்த பணிகள், செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தை திருமணம், திறந்தவெளி கழிப்பிடம் கூடாது என மாவட்ட ஆட்சியர் வாசிக்க பொதுமக்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.



இதனையடுத்து கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கிராம சபை கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் அலமேலு மங்கை, ஊராட்சி செயலர் நாகராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...