கோவையில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை திருடிவிட்டு சிக்கிய பெண் - வைரலாகும் வீடியோ

கோவை காந்திபுரத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் முகக்கவசம் அணிந்தபடி வந்த ஜோடி, நூதன முறையில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விற்பனையாளர் உரிய நேரத்தில் கவனித்ததால் 60 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் தப்பியது.



கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் கடையில் கடையில் விஷ்ணு என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை கடைக்கு வந்த மாஸ்க் அணிந்து வந்த இளைஞர் மற்றும் ஒரு பெண் கம்பியூட்டர் மவுஸ் பார்த்துக் கொண்டிருந்தனர்.



அந்த நேரத்தில், அவர்கூட வந்த அந்தப் பெண்மணி டிஸ்ப்ளே-வில் வைக்கப்பட்டுள்ள லேப்டாப் எடுத்து தனது பேக்கில் வைத்துள்ளார்.



இதனைப் பார்த்த விற்பனையாளர், அந்த லேப்டாப்பை கொடுத்து விடுங்கள் என பெண்ணிடம் கூறினார். இதையடுத்து, பையில் இருந்த லேப்டாப்பை அந்தப் பெண் திரும்பக் கொடுத்தார். பின்னர் இருவரும் எந்த பொருளையும் வாங்காமல் அந்த கடையை விட்டு சென்று விட்டனர்.



சரியான நேரத்தில் விற்பனையாளர் விஷ்ணு கவனித்தால் 60 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் தப்பியது. இந்த நூதன கொள்ளை முயற்சியின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...