கோவையில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை திருடிவிட்டு சிக்கிய பெண் - வைரலாகும் வீடியோ

கோவை காந்திபுரத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் முகக்கவசம் அணிந்தபடி வந்த ஜோடி, நூதன முறையில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விற்பனையாளர் உரிய நேரத்தில் கவனித்ததால் 60 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் தப்பியது.



கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் கடையில் கடையில் விஷ்ணு என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை கடைக்கு வந்த மாஸ்க் அணிந்து வந்த இளைஞர் மற்றும் ஒரு பெண் கம்பியூட்டர் மவுஸ் பார்த்துக் கொண்டிருந்தனர்.



அந்த நேரத்தில், அவர்கூட வந்த அந்தப் பெண்மணி டிஸ்ப்ளே-வில் வைக்கப்பட்டுள்ள லேப்டாப் எடுத்து தனது பேக்கில் வைத்துள்ளார்.



இதனைப் பார்த்த விற்பனையாளர், அந்த லேப்டாப்பை கொடுத்து விடுங்கள் என பெண்ணிடம் கூறினார். இதையடுத்து, பையில் இருந்த லேப்டாப்பை அந்தப் பெண் திரும்பக் கொடுத்தார். பின்னர் இருவரும் எந்த பொருளையும் வாங்காமல் அந்த கடையை விட்டு சென்று விட்டனர்.



சரியான நேரத்தில் விற்பனையாளர் விஷ்ணு கவனித்தால் 60 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் தப்பியது. இந்த நூதன கொள்ளை முயற்சியின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...