பொள்ளாச்சியில் தூய்மைப்பணியாளர்கள் வாழ்வுரிமை பேரணி - 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி அனைத்து வகையான தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் தமிழகத்தில் கலைஞர் அறிவித்த 6 மணி நேர வேலைத் திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.



பொள்ளாச்சி: உழைப்பாளர் தினத்தையொட்டி, பொள்ளாச்சியில் தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார தூய்மை மற்றும் பொது பணியாளர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாழ்வுரிமை பேரணி நடைபெற்றது.

மாவட்ட தலைவர் முருகானந்தம் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கி பேரணி, மத்திய பேருந்து நிலையம், வெங்கட்ராமன் வீதி வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் 200.க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்தப் பேரணியின்போது, திமுக அரசு கடந்த தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து வகையான தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளாட்சி துறையில் உள்ள ஒரு லட்சம் பணியாளர்கள் வேலை இழக்கும் வகையில் 152, 139,111 அரசாணை வெளியிடப்பட்டது.



உடனடியாக தமிழக அரசு அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை திட்டத்தை முன்மொழிந்துள்ளனர். உடனடியாக அந்தத் திட்டத்தை வாபஸ் பெற்று கலைஞர் அறிவித்த 6 மணிநேர வேலை திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...