பொள்ளாச்சியில் ஓவியப் போட்டி -மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

பொள்ளாச்சியில் கோவை அகாடமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பள்ளி, மாணவ மாணவிகளின் தனி திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



கோவை: பொள்ளாச்சியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

கிராமப்புறங்கள் மற்றும்நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் செல்போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளுக்கு மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கிலும், இயற்கை விவசாயம், நீர் வளம் காப்பது, குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை அகாடமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்ஓவியப்போட்டி நடைபெற்றது.



இதில் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து LKG முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பூக்கள்-பழங்கள் பூக்கூடை, பூ ஜாடி, பழக்கூடை, நீர் வளம் காப்போம், இயற்கையை போற்றுவோம், எனது கிராமம் என்ற நான்குதலைப்புகளில் நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.



தங்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் மாணவ மாணவிகள் ஓவியங்களை வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...