பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்

பல்லடம் அருகே சின்னிய கவுண்டம்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையால் விவசாய நிலம் பாதிப்படைவதாகவும் பொது மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளதால் அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு இயங்கி வரும் மதுபான கடையால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் குடிமகன்கள் மது பாட்டில்களை விவசாய நிலத்திலும் சாலைகளிலும் வீசி செல்வதால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும்,



மதுபான கடைக்கு அருகிலேயே அங்கன்வாடி மையம்,பள்ளிக்கூடங்கள், கோவில்கள் அமைந்துள்ளதாகவும் பள்ளி குழந்தைகள் அவ்வழியாகச் செல்வதற்கு கூட அச்சமடைவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் 24, மணி நேரமும் சட்டவிரோதமாகவும் மது விற்பனை நடைபெறுவதால் மிகுந்த பாதிப்பு ஏற்படுவதால் இந்த மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடமும்,



முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று அப்பகுதி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பெண்கள் கோஷமட்டபடி ஒருபுறம் போராட்டம் நடத்திய நிலையில் 50க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...