பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்

பல்லடம் அருகே சின்னிய கவுண்டம்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையால் விவசாய நிலம் பாதிப்படைவதாகவும் பொது மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளதால் அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு இயங்கி வரும் மதுபான கடையால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் குடிமகன்கள் மது பாட்டில்களை விவசாய நிலத்திலும் சாலைகளிலும் வீசி செல்வதால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும்,



மதுபான கடைக்கு அருகிலேயே அங்கன்வாடி மையம்,பள்ளிக்கூடங்கள், கோவில்கள் அமைந்துள்ளதாகவும் பள்ளி குழந்தைகள் அவ்வழியாகச் செல்வதற்கு கூட அச்சமடைவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் 24, மணி நேரமும் சட்டவிரோதமாகவும் மது விற்பனை நடைபெறுவதால் மிகுந்த பாதிப்பு ஏற்படுவதால் இந்த மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடமும்,



முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று அப்பகுதி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பெண்கள் கோஷமட்டபடி ஒருபுறம் போராட்டம் நடத்திய நிலையில் 50க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...