தாராபுரம் அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்துப் பொதுமக்கள் போராட்டம்

தாராபுரம் அருகே தாயம்பாளையம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்தினை முறையாக இயக்குவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம், சூரியநல்லூர், ராசிபாளையம், தம்புரெட்டிபாளையம், தாயம்பாளையம் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் தினமும் செல்லக்கூடிய 7-ம் நம்பர் அரசு பஸ் சரிவர வராததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் 100 நாள் பணியாளர்கள் ராசிபாளையம் பகுதியில் பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்த பேருந்து மூலமாக தாயம்பாளையம் அரசு பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லக்கூடிய நோயாளிகளும் மற்றும் இந்த கிராம பகுதிகளில் இருந்து நகரத்திற்கு செல்ல கூடியவர்களும் நாள்தோறும் பயணிக்கின்றனர்.

ஆனால், இந்த பேருந்து சரிவர வராததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.



அதன்படி, அந்த வழியாக வந்த அரசு பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர். தகவல் அறிந்த ஊதியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜன், தாராபுரம் அரசு பேருந்து கிளை மேலாளர் ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தினமும் உரிய முறையில் பேருந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...