திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் - தாராபுரம் அருகே போலீசாரால் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருட்டு வழக்கில் மதன், லோகேஸ்வரன் என இருவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த சுமதி என்கிற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து மூன்றே கால் பவுன் தங்க நகையும் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த காங்கயம் பாளையம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்கிற அலையாசி மதன் (வயது 35).

இவருடைய மனைவி சுமதி (வயது31). அதே பகுதியில் வசிக்கும் நண்பர் லோகேஸ்வரன் (வயது35).

இவர்கள் 3 பேரும் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள வழக்கறிஞர் வீட்டிலும், நஞ்சம்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் சாமி கழுத்தில் இருந்த மாங்கல்யத்தையும் திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து, இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தாராபுரத்தை அடுத்த காங்கயம் பாளையம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்கிற அலையாசி மதன் (வயது 35) மற்றும் இவருடைய நண்பர் லோகேஸ்வரன் (வயது35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய செல்வகுமார் மனைவி சுமதியை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சுமதியை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சப்-இன்ஸ்பெகடர் கருப்பு சாமி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுமதி கழுத்தில் நகை அணிந்து இருந்தார். அது திருட்டு நகைதான் என தெரியவந்தது.

இதையடுத்து, சுமதியை கைது செய்து, அவர் அணிந்திருந்த 3¼ பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். கைதான சுமதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...