கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடர் நகைக் கொள்ளை - குற்றவாளியை கைது செய்தது தனிப்படை!

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மாரிமுத்து என்ற நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து தங்க நகைகளும் மீட்கப்பட்டன. வேறு ஏதாவது திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை சூலூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 23.02.2023 அன்று, 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட லைன் இன்ஸ்பெக்டர் எனக் கூறி, சோலார் பழுதுபார்ப்பதற்காக வந்தார். அப்போது, வீட்டில் இருந்த 9 சவரன் நகைகளை அந்த நபர் கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடிவந்தனர். அதன்பேரில், மாரிமுத்து என்றழைக்கப்படும் முத்துக்குமார் (வயது33) என்ற நபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர் சூலூர், அன்னூர், கோவில்பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 வீடுகளில் 30 சவரன் தங்கத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து தங்க நகைகளையும் மீட்டனர்.

இது தொடர்பாக பேசிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததோடு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...