எல்லாவற்றையும் பயன்படுத்தி கொண்டு வைகோவையே குறைசொல்வதா? - துரைசாமிக்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் கேள்வி!

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக மாவட்ட செயலாளர் நாகராஜ், வைகோ மூலம் எல்லாவற்றையும் பயன்படுத்தி கொண்டு தற்போது வைகோவையே, அவைத்தலைவர் துரைசாமி குறை சொல்கிறார் என்றும், திமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது என்று போர் கொடி தூக்கியவர் தான் துரைசாமி எனவும் குற்றம்சாட்டினார்.


திருப்பூர்: வைகோ மூலம் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்ட அவை தலைவர் துரைசாமி தற்போது வைகோவையே குறைசொல்வதா என திருப்பூர் மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.



திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள மதிமுக மாநகர மாவட்ட அலுவலகத்தில் மாநகர மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக மாநகர மாவட்ட செயலாளர் நாகராஜ் கூறியதாவது, வைகோ மூலம் எல்லாவற்றையும் பயன்படுத்தி கொண்டு தற்போது வைகோவையே, அவைத்தலைவர் துரைசாமி குறை சொல்கிறார்.

தற்போது திமுகவுடன் மதிமுக இணைய வேண்டும் என்று சொல்பவர். கடந்த காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்த போது திமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது என்று போர் கொடி தூக்கியவர் தான் துரைசாமி. 3 பொதுக்குழுவுக்கு வராத துரைசாமி இன்று வரை அவை தலைவராக இருந்து வருகிறார்.

வைகோ மனிதநேயத்துடன் இருப்பதால் தான் இதுவரை அவைதலைவர் துரைசாமி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதிமுகவில் உள்ளவர்கள் போலி உறுப்பினர் என்று சொல்வது மதிமுக தொண்டர் ஒவ்வொருவரையும் அவமானப்படுத்தும் விதமாக உள்ளது.

இனிவரும் காலங்களில் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஆதரவு தெரிவிப்பார்கள். துரை வைகோ கட்சிக்குள் வருவதற்கு முன் மதிமுக 28 அமைப்பாக இருந்ததாகவும்.

அவர் கட்சிக்கு வந்த பின்பு தற்போது 48 அமைப்புகளாக இருந்து வருவதாக தெரிவித்தார். வாரிசு அரசியல் வேண்டாம் என்று வைகோ எப்போதும் சொன்னதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே மதிமுக சொத்துக்களை அபகரித்த அவைத்தலைவர் துரைசாமி ஒழிக என்று, அவருக்கு எதிரான கோஷங்களை கட்சி நிர்வாகிகள் எழுப்பினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...