எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டின் 135 வது நிறுவனர் பிறந்த தின விழா

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டின் நிறுவனர் ரங்கசாமி அவர்களின் 135 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். இணை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, அறங்காவலர்கள் நரேந்திரன், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை கவின்கேர் பிரைவேட் லிமிடட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.கே.ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

இந்நிகழ்ச்சியில் விஜயகுமார் பேசும்போது, எங்கள் அறநிறுவனம் நாங்கள் செய்யும் செயல்களில் திடமாக உள்ளது. இங்கு பணிபுரிவோர், மாணவ, மாணவியர் நலனுக்காகவும், மாணவர்களை நாளை மிகச்சிறந்த தலைவர்களாக உருவாக்க செயல்படுகின்றது என்று கூறினார்.

 



இதனைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டில் 25 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 14 ஊழியர்களுக்கு நற்சான்றிதழும், பரிசாக தங்ககாசும் வழங்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, எஸ்ஆர்ஐடி முதல்வர் பால்ராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மீனாக்க்ஷி சாகர் நாட்டிய குழுவினரின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...