ஆருத்ரா விவகாரத்தில் அவதூறு - 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு வழங்ககோரி ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!

ஆருத்ரா விவகாரத்தில் ரூ.84 கோடி பணம் பெற்றதாக தன்னை பற்றி அவதூறு பரப்பிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் ஆர்.எஸ்.பாரதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


சென்னை: ஆருத்ரா விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால், 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு வழங்ககோரி பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திமுகவினரின் சொத்துப்பட்டியல் என சில விவரங்களை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட முக்கிய அமைச்சர்களின் பெயர்களில் பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், இது திமுகவினரின் முதல் கட்ட சொத்து பட்டியல் எனக் கூறிய அண்ணாமலை, இதுகுறித்து, சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்போவதாகவும், கூறியிருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை எந்தவித ஆதாரமும் இன்றி அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். மேலும், அண்ணாமலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து அண்ணாமலை தனது கருத்துக்கு மன்னிப்பு கோரவில்லை என்றால் 500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி என திமுகவினர் பலரும் அடுத்தடுத்து தங்களை பற்றி அண்ணாமலை அவதூறு பரப்பியதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.

இதனிடையே ஆருத்ரா விவகாரத்தில் அண்ணாமலை ரூ.84 கோடி பெற்றதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியிருந்தார். ஆருத்ரா விவகாரத்தில் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை, என் மீது அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் மூலமாக பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...