ஆருத்ரா விவகாரத்தில் அவதூறு - 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு வழங்ககோரி ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!

ஆருத்ரா விவகாரத்தில் ரூ.84 கோடி பணம் பெற்றதாக தன்னை பற்றி அவதூறு பரப்பிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் ஆர்.எஸ்.பாரதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


சென்னை: ஆருத்ரா விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால், 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு வழங்ககோரி பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திமுகவினரின் சொத்துப்பட்டியல் என சில விவரங்களை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட முக்கிய அமைச்சர்களின் பெயர்களில் பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், இது திமுகவினரின் முதல் கட்ட சொத்து பட்டியல் எனக் கூறிய அண்ணாமலை, இதுகுறித்து, சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்போவதாகவும், கூறியிருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை எந்தவித ஆதாரமும் இன்றி அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். மேலும், அண்ணாமலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து அண்ணாமலை தனது கருத்துக்கு மன்னிப்பு கோரவில்லை என்றால் 500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி என திமுகவினர் பலரும் அடுத்தடுத்து தங்களை பற்றி அண்ணாமலை அவதூறு பரப்பியதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.

இதனிடையே ஆருத்ரா விவகாரத்தில் அண்ணாமலை ரூ.84 கோடி பெற்றதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியிருந்தார். ஆருத்ரா விவகாரத்தில் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை, என் மீது அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் மூலமாக பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...