அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை - கோவையில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி கோவையிலிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டுச் சென்றார்.



கோவை: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த உறுப்பினரான இ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்திக்கும் நிகழ்வுக்கும், இதர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு செல்கிறார்.



இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவருக்கு, திமுக தொண்டர்கள் புத்தகங்கள் வழங்கியும் பொன்னாடைகள் வழங்கியும் உற்சாக முழக்கங்களை எழுப்பியும் வரவேற்பு அளித்தனர்.



தொண்டர்களின் அன்பளிப்புகளை பெற்றுக் கொண்ட அவர், பின்னர் சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டார்.

இந்நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். ஈரோட்டில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இன்று இரவு அவர் மீண்டும் கோவை வந்து விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...