உடுமலை அருகே கழிவுகளால் சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல்குட்டை ஊராட்சியில் கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குரல்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு சுடுகாடு மற்றும் நீர்வழிபள்ளம் குப்பைக்கிடங்காக மாறி துர்நாற்றமும் நோய்பரப்பும் இடமாகவும் மாறியுள்ளது.



கிழக்குபள்ளத்தில் தனியார் மில்லின் கழிவுநீர், குப்பைகள், கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தனியார் மில்லின் மீதும் கோழிக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவோர் மீதும் சுடுகாட்டில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் போராட்டம் நடத்தியும் இதேநிலை தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பள்ளங்களில் பன்றிக் குடிசைகள் உட்பட பல்வேறு ஆக்கிரமிப்புகளும் அப்பகுதியில் இருந்து வருகிறது.



உடுமலை ஊராட்சி ஒன்றியமும் குரல்குட்டை ஊராட்சியும் இப்பிரச்சனைகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அடுத்தக்கட்ட போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...