கோவை அரசு மருத்துவமனை அருகே ஏர்ஹாரணை ஒலிக்க விடும் பேருந்துகள் - நோயாளிகள் அவதி!

கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் இங்கு வந்து செல்லும் போது, போட்டி போட்டுக்கொண்டு ஏர் ஹாரனை ஒலிக்கவிடுவதால், நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.


கோவை: கோவை அரசு மருத்துவமனை அருகே ஏர் ஹாரனை ஒலிக்க விடும் பேருந்துகளால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை அரசு பேருந்து நிலையத்துக்கு எதிரே அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு கோவை மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து செலகின்றனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருவதும் அங்கிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறுவதும் வழக்கம்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு எதிர்புறம் உள்ள பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏர் ஹாரன்களை ஒலிக்க விடுகின்றனர் என கூறப்படுகிறது.

அந்த பேருந்து நிலையத்தின் பரப்பளவு மிகவும் குறைவானதாகும். ஒரு பேருந்து வெளியே சென்றால் மட்டுமே, பின்னால் வரும் அடுத்த பேருந்து வெளியேற முடியும்.

நேரப் பிரச்சினை காரணமாக ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வது அங்கு வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் ஏர்ஹாரன் சத்தம் அந்த இடத்தில் எந்த நேரமும் ஒலித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. 

இந்த சத்தம் காரணமாக அங்கு வரும் நோயாளிகளுக்கு பதட்டம், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது குறித்து நோயாளிகள் கூறியதாவது, இவர்கள் அடிக்கும் ஏர்ஹாரன் பிரசவ வார்டு வரை கேட்கிறது. பொதுவாக சிகிச்சையில் இருக்கும் நோயாளியிடம் சத்தமாக பேசக்கூடாது என்று கூட மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கம்.

ஆனால் இந்த ஏர் ஹாரன் சத்தங்கள் நோயாளிகளின் நெஞ்சை பதற வைக்கிறது. ஓட்டுனர்கள் இதனை புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே நல்லது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, பொதுவாக நகர்ப்புற எல்லைக்குள் ஏர் ஹாரன் அடிக்க கூடாது என்று வட்டாரப் போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் அதையும் மீறி ஒரு சில ஓட்டுனர்கள் இவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள்.

அவ்வாறு செயல்படும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து துறையினரும் போக்குவரத்து போலீசாரும் இதனை அன்றாடம் கண்காணிக்க வேண்டும்.

அவ்வாறு கண்காணிக்கும் பட்சத்தில் நகர்ப்புற எல்லைக்குள் அமைதியான பயணத்தை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...