பூலாங்கிணர் பகுதியில் நாளை மின்தடை-மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு!

உடுமலை அருகேயுள்ள பூலாங்கிணர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடபூதிநத்தம், எஸ். பி.நத்தம், வாளவாடி, தளி, திருமூர்த்தி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: பூலாங்கிணர் துணை மின்நிலையத்தில் பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளைய தினம் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உடுமலை மின்வாரிய இயக்குதலும், பேணுதலும் செயற்பொறியாளர் த.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,பூலாங்கிணர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பூலாங்கிணர், தளி பீடர்களில் அமைந்துள்ள மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடபூதிநத்தம், எஸ். பி.நத்தம், வாளவாடி, தளி, திருமூர்த்தி நகர், ஜல்லிபட்டி, ஓனாகல்லூர், சந்தன கருப்பனூர், லிங்கமவூர், குறிச்சிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...