மடத்துக்குளம் அருகே மளிகை கடையில் செல்போன் திருட்டு - இளைஞர்கள் மூவர் கைது!

உடுமலை அடுத்த மடத்துக்குளம் அருகே மளிகைக்கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து, உரிமையாளரின் விலை உயர்ந்த செல்போனை திருடிச் சென்ற இளைஞர்கள் 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மளிகை கடை உரிமையாளரின் செல்போனை திருடிச் சென்ற மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மடத்துக்குளத்தை அடுத்த கொழுமம் சமத்துவபுரம் பகுதியில், முத்துச்சாமி என்பவரது மனைவி ராணி (46) மளிகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவருடைய மளிகைக் கடைக்கு 3 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் ராணியிடம் பீடி, தீப்பெட்டி, வாட்டர் பாட்டில், தண்ணீர் டம்ளர் போன்றவற்றை வாங்கியுள்ளனர்.

அதற்கான பணத்தை பெற்றுக்கொண்ட ராணி, வேறு வேலையாக கடைக்கு உள்ளே சென்றுள்ளார். அப்போது, சத்தமில்லாமல் கடைக்குள் நுழைந்த இளைஞர்கள் அங்கு வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடினர். ராணி திரும்பி வந்து பார்த்தபோது செல்போன் திருட்டுப்போனது தெரிய வந்தது.

உடனடியாக சம்பவம் குறித்து குமரலிங்கம் காவல் நிலையத்தில் ராணி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்போன் சிக்னல் மற்றும் நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்தனர்.

இந்த செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்கள் கிருஷ்ணாபுரம் சக்திநகர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகன் அருண் குமார் (23), ருத்ராபாளையம் குருவக்களம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் சந்தோஷ் என்ற மணிகண்டன் (24) மற்றும் கிருஷ்ணாபுரம் ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த கிட்டான் என்பவரது மகன் முத்துமாணிக்கம் (22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து செல்போனை மீட்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...