உடுமலையில் பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம் - தோட்டக் கலைத்துறை ஏற்பாடு!

உடுமலை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில், பயனாளிகள் தேர்வுக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு தோட்டக் கலை துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில், பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

உடுமலை வட்டாரத்தில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு, சிறப்பு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில், ரெட்டிபாளையம் கிராமத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.



வட்டார தோட்டக் கலைத்துறை இயக்குனர் மோகன ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தோட்ட கலைதுறை சார்பில், செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், அதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், பயனாளிகள் தேர்வுக்காக விளைநிலங்களில், அதிகாரிகள் நேரடி கள ஆய்வு செய்தனர். அப்பகுதியில் தென்னை சாகுபடியில் காணப்படும் நோய் மற்றும் பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் முகாமில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ரெட்டிபாளையம் கிராம விவசாயிகள் மற்றும் தோட்ட கலைத்துறை உதவி அலுவலர் பிரியங்கா உட்பட அலுவலர்கள் பலரும் இந்த முகாமில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...