கோவையில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பு - இளம் பெண் கைது!

கோவை கோட்டூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட கவுதமி என்ற இளம் பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 13 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை கோட்டூரில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இளம் பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கோட்டூரில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மலையாண்டி பட்டினத்தை சேர்ந்த பழனாத்தாள் (75), சிவபாக்கியம் (65), துளசியம்மாள் (75) ஆகிய மூதாட்டிகளிடம் இருந்து மொத்தம் 13 சவரன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

செயினை பறிகொடுத்த மூதாட்டிகள் இது குறித்து கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் இளம் பெண் ஒருவர் வயதான மூதாட்டிகளை குறி வைத்து செயினை பறிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து அந்த பெண்ணை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அவரை கோட்டூர் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தூத்துக்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்த கவுதமி (34) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 13 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கவுதமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...